தாதா சாகேப் பால்கே விருது: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – ரஜினிகாந்த்

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று காலை 11 மணிக்கு 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தேர்வான நடிகர், நடிகைகளுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கௌரவித்தார். திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது கலைசேவையை பாராட்டி வழங்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதவியில் கூறியிருப்பதாவது:

“மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை என்னை உருவாக்கிய என்னுடைய குருநாதர் கே.பாலச்சந்தர் சார் அவர்களுக்கும் , என்னுடைய அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும் , என்னுடைய நண்பர் ராஜ் பகதூர் அவர்களுக்கும், என்னுடைய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் ,தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் ,விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ,பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!