டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சருடன் டென்மார்க் பிரதமர் சந்திப்பு

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் மூன்று நாள் அரசு பயணமாக இன்று இந்திய வந்துள்ளார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். மேலும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார்.

வருகை தந்த டென்மார்க் பிரதமர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் செய்தியாளர்களிடம் கூறியது, “இந்தியாவை எங்கள் நெருங்கிய நட்பு நாடாக நாங்கள் கருதுகிறோம்”. இந்த வருகையை டென்மார்க்குக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் ஒரு மைல்கல்லாக பார்க்கிறேன் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் இன்று டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!