திண்டுக்கல் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் .. 4 பேரை கைது செய்த காவல்துறை

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். மரியநாதபுரம் செட்டிகுளத்தில் மீன் குத்தகைக்கு எடுத்துள்ளார். இவரது மகன் ராகேஷ்குமார் (26) நேற்று இரவு 1.30 மணியளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தென் மண்டல ஐஜி அன்பு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பிரகாஷ், கணேச மூர்த்தி, ஜான்சூர்யா, மரிய பிரபு ஆகியோரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குத்தகை ஏலத்தில் ஏற்பட்ட பிரச்னையால் சுட்டுக்கொலை செய்த‌தாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!