ட்விட்டரின் புதிய தலைமை அதிகாரி பராக் அகர்வாலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..!

ட்விட்டரின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் சிஇஓக்கள் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இந்நிலையில் சிஇஓ பதவிக்கான பராக் அகர்வாலின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

ட்விட்டரின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் ஆண்டு சம்பளமாக $1 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.7.49 கோடி) பெற உள்ளார். இதேபோல் 12.5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனப் பங்குகளை 4 வருடங்களுக்கு பெற உள்ளார்.

Translate »
error: Content is protected !!