சொகுசு கப்பலில் போதைப்பொருள்: 10 பிரபலங்கள் கைது

மும்பையில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் பிரபலங்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று நள்ளிரவு மும்பையிலிருந்து புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நபர் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி சக பயணிகள் போல் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரபல பாலிவுட் நடிகர்களின் குழந்தைகளும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கொண்டாட்டத்தின் போது, போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அதிரடி சோதனையை தொடங்கிய அதிகாரிகள் சுமார் 7 மணி நேர தேடுதலுக்கு பின், டெல்லி மற்றும் அரியானாவை சேர்ந்த இரு போதைப்பொருள் கடத்தல் காரர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!