தமிழகத்தில் வரும் 26ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 26ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு வெப்பநிலையை ஒட்டியே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.

Translate »
error: Content is protected !!