உளுந்தூர்ப்பேட்டை அருகே அரசு விரைவு பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி,

உளுந்தூர்ப்பேட்டை அருகே அரசு விரைவு பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்த 8 பேர் படும் காயமடைந்துள்ளனர்.

மதுரையில் இருந்து சென்னைக்கு 38 பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வலதுபுறம் முந்திச் செல்ல முயன்ற வாகனத்திற்கு இடதுபுறத்தில் ஒதுங்கியதில் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 7 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் ஜோதீஸ்வரன் உள்பட 8 பயணிகள் படுகாயமடைந்தனர்.

Translate »
error: Content is protected !!