கனமழை காரணமாக வெள்ளத்தின் நடுவே பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்த மின் ஊழியர்கள்

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் மலட்டாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தின் நடுவே பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரெட்டிச்சாவடி அருகே ஆற்றின் நடுவே இருந்த மின்கம்பம் வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், பெரிய காடு, நல்லவாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் மின்கம்பம் மூலம் மின்சாரம் பெற்று வருவதால், மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், மஞ்சக்குப்பம் பிரிவுக்கு உட்பட்ட மின்வாரிய ஊழியர்கள், புதிய மின்கம்பத்தை நட்டு மின் பாதையை சரி செய்தனர்.

Translate »
error: Content is protected !!