ஆன்லைன் நெல் கொள்முதலை ரத்து செய்ய வலியுறுத்தி  விவசாயிகள் சாலை மறியல்

திருவாரூரில் ஆன்லைன் நெல் கொள்முதலை ரத்து செய்ய வலியுறுத்தி  விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நெல் விற்பனை செய்ய முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவித்த போதிலும், ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் மிகுந்த வேதனையடைந்துள்ள விவசாயிகள், விக்கிரபாண்டியம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.

 

Translate »
error: Content is protected !!