கரடியை துப்பாக்கியால் சுட்ட வனத்துறை அதிகாரிகள்

உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் தாக்க வந்த கரடியை வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சாமோலி மாவட்டம் ஜோஷிமத் பகுதியில் கரடி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் கரடி கிராமவாசிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்த கிராமவாசிகள் கரடியை பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று இரவு கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் இறங்கினர். அப்போது கரடியானது வனத்துறை அதிகாரிகளையும் தாக்க முற்பட்டுள்ளது. இதையடுத்து கரடியை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!