பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவரோ அல்லது அவரது பெற்றோரோ அடையாள அட்டையை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!