தனியார் பள்ளியை தூய்மை செய்த ஜி.எஸ்.டி வரி ஆணையர்

தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை தெற்கு சேவை மற்றும் சரக்கு வரி ஆணையரகம் மற்றும் சென்னை சேவை மற்றும் சரக்கு வரி தணிக்கை ஆணையரகங்களின் சார்பில் 16. 8 .21 முதல் 31. 8 .21 வரை தூய்மை வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆணையர் சுதா கோகா தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் சென்னையில் கோடம்பாக்கத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் முதியோருக்கான சுத்தம் செய்யும் பொருட்களை வழங்கியது.

இவற்றின் தொடர்ச்சியாக நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள இந்த ஆணையராக அலுவலக வளாகத்தில் துளசி கற்பூரவள்ளி போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த மரக்கன்றுகளையும் செடிகளையும் ஆணையர் சுதா கோகா தலைமையில் அந்த அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்களும் அலுவலர்களும் நட்டனர்.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர்கள் ஜெயப்பிரியா உட்பட இணை மற்றும் துணை ஆணையர்கள் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!