புதுச்சேரியில் கனமழை – தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு அழைப்பு

புதுச்சேரியில் இன்று காலை முதல் 5 மணி நேரத்தில் 13 செ.மீட்டர் மழை பொழிந்துள்ளது. விடியவிடிய பெய்த  கனமழையில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளது எனவும், மடுகரை மல்லாட்டாறு ஆற்றில் ஆண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தகவலளித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க 194 முகாம்கள் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், புதுச்சேரியில் மேலும் மழை தீவிரமடைவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசியபேரிடர் மீட்பு குழுவினரை அழைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.

 

 

 

Translate »
error: Content is protected !!