கட்டிடமே இல்லாமல் மருத்துவக்கல்லூரியை நடத்துவது எப்படி? –பி.டி.ஆர் கேள்வி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டிடத்திற்காக ஒரு கல் கூட நடப்படாத நிலையில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது எப்படி என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

மதுரை சிம்மக்கல் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், மருத்துவமனைகளுக்கு வர முடியாத மக்களுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், கட்டிடமே இல்லாமல் மருத்துவக் கல்லூரியை எப்படி நடத்துவது எனக் கேள்வி எழுப்பினார். 

Translate »
error: Content is protected !!