ஆவின் பொருட்களின் விலை அதிகரிக்கப்பு

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அரை லிட்டர் தயிர் 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயகவும், ஒரு லிட்டர் ஆவின் நெய் 515 ரூபாயிலிருந்து 535 ரூபாயாகவும், குல்பி 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!