கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்து போலீசார் நூதன தண்டனை

கோவை மதுக்கரையை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கு நடந்த ஜமாப் மேளத்துக்கு உள்ளூர் சிறுவர்கள் சிலர் நடனமாடிக்கொண்டிருந்தனர். நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த இளைஞரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வியரசன் , சிறுவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, 100 திருக்குறள்களை எழுதி, படிக்க வைத்து மனப்பாடம் செய்ய சொல்லி நூதன தண்டனை வழங்கினார். இதையடுத்து அனைத்து சிறுவர்களுக்கும் திருக்குறளை எழுதி காட்டியபின் அறிவுறை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!