நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற சிவ ஆலயங்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலும் ஒன்று இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில், ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா மிக சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நிலையில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாள் சன்னதியில் இன்று காலையில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு பல்வேறு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Translate »
error: Content is protected !!