மூன்று விருதுகளை தட்டி சென்ற “ஜெய்பீம்”

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான “ஜெய்பீம்” திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்படம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில் ஜெய்பீம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரும் நிலையில், தற்போது 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த படத்திற்கான விருதை ஜெய்பீமும், சிறந்த நடிகைக்கான விருதை லிஜோமோல் ஜோஸும் பெற்றனர். இது படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!