நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் திரையிடப்பட்ட ‘ஜெய் பீம்’ – எங்கு தெரியுமா?

மகாராஷ்டிராவில் பொதுவெளியில் ஜெய் பீம் படத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திரையிடப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஜெய் பீம்.

இப்படம் எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இப்படத்தைப் பார்த்த இருளர் பழங்குடியின மக்கள் எங்க வாழ்க்கையை அப்படியே எடுத்திருக்காங்க. எங்க கஷ்டத்தை அப்படியே சொல்லியிருக்காங்க என கண்ணீர்மல்க படத்தை அங்கீகரிக்கின்றனர். வெளிமாநிலங்களில் குறிப்பாக கேரளா, மகாராஷ்டிராவில் படத்துக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பொதுவெளியில் படத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திரையிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!