கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் கொலை வழக்கில் கைதான அவரது நண்பர் ரமேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும், அவரது நண்பர் ரமேஷ் என்பவரையும் கடந்த 25ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். தனபாலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியதுடன், ரமேஷை 5 நாள் காவலில் வைக்க அனுமதி அளித்தது. இதற்கிடையில், மீண்டும் விசாரணைக்கு வந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!