பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி கைது

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற ரவுடியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளது. அப்போது அந்தப் பெண் கூச்சலிடவே, ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அப்போது 2 பேர் தப்பியோடிய நிலையில், 2 பேர் காவல்துறையினரை தாக்க முயன்றுள்ளனர்.

தற்காப்புக்காக ஒருவரை காவல்துறையினர் சுட்டதில் குருவி விஜய் என்பவரது காலில் காயம் ஏற்பட்டது. குருவி விஜய்யுடன் சேர்த்து மற்றொருவரையும் பிடித்த நிலையில், தப்பியோடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!