மகாராஜபுரம் நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை  மகாராஜபுரம் நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் மகாராஜாபுரத்தில் பழமை வாய்ந்த கிராமத்து ஆலயமான நாகாத்தம்மன் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்களுடன் புறப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசம் மற்றும் நாகா அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Translate »
error: Content is protected !!