மாலியின் முன்னாள் பிரதமர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

போவ்மியோ மைஹா (வயது 67) 2017-18 வரை மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் பிரதமராக இருந்தார். இந்நிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் மாலியின் ஜனாதிபதியாக இருந்த இப்ராகிம், 40 மில்லியன் அமெரிக்கா டாலரில் ஜெட் விமானத்தை வாங்கியதில் முன்னாள் பிரதமர் பொவ்மியொவுக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மாலி நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, ஜெட் விமானம் வாங்கியது தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் பொவ்மியொ நேற்று கைது செய்யப்பட்டார்.

Translate »
error: Content is protected !!