வடசென்னையில் “அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்” – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110 ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், அயோத்திதாசர் 175 ஆவது ஆண்டு விழாவின் நினைவாக வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலவர் அறிவித்தார். அயோத்திதாச பண்டிதரின் நினைவாக அவரின் பெருமையை உணரும் வகையில் ஒரு மண்டபம் அமைக்கப்படும். அயோத்திதாச பண்டிதர் தமிழ் மற்றும் திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாகப் பயன்படுத்திய மொழிப்போராளியாளர் என்று அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!