அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அவரின் அண்ணன் பி.கே.தேவராஜ் சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவராஜ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேவராஜ் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பதும் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!