‘ஒமிக்ரான் கொரோனா பரவலை பயணத் தடைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது’ என உலக நல்வாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளும் வெளி நாடுகள் உடனான பயணத் தடை மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் ‘ஒமிக்ரான் பரவலை பயணத் தடைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக நல்வாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.