திருநெல்வேலி வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பரிசோதனை.. தொடர்பில் இருந்த 78 பேருக்கும்..!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் இருந்து சென்னை வழியாக திருநெல்வேலிக்கு ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த பரிசோதனையின் முடிவில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வந்தவர் என்பதால், அந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் சோதனை நடந்து வருகிறது.

பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே, அந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும் என்றும், தற்போது லேசான அறிகுறிகளுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் அவருடன் தொடர்பில் இருந்த 78 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களின் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!