இந்தியாவை அடுத்து இலங்கை பரவியது ஒமைக்ரான் கொரோனா

கொரோனாவிலுருந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ், தென்ஆப்பிரிக்காவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மரபணு சோதனையில் ஒமைக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒமைக்ரான் உறுதிப்படுத்தப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!