பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ஜனவரி 3ம் தேதி வழங்கப்படும்

 

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ஜனவரி 3ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஜனவரி 3ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 21 வகையான பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மழை நிவாரண தொகை மற்றும் பொங்கல் சிறப்பு தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து வரும் நாட்களின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் கொரோனா நெருக்கடி நிலவிய போதிலும், பொங்கல் பரிசு தொகுப்புடன் சிறப்பு தொகையாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Translate »
error: Content is protected !!