புத்தாண்டு அன்று ராமநாதபுரத்தில் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை

ஆங்கில புத்தாண்டு அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம், ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், அரியமான், காரங்காடு, நரிப்பையூர், மூக்கையூர், சேதுக்கரை ஆகிய கடலோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்து மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!