புதுக்கோட்டை: துப்பாக்கிச் சூடு பயிற்சி: குண்டு பாய்ந்து சிறுவன் பலத்த காயம்

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எப்.) துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று பயிற்சியின் போது தவறுதலாக வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி (வயது 11) என்ற சிறுவன் தலையில் துப்பாக்கிச் குண்டு பாய்ந்து பலத்த காயம் அடைந்தான்.

இதையடுத்து புகழேந்திக்கு புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உயர் சிகிச்சைக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் தஞ்சைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

Translate »
error: Content is protected !!