போதை பொருள் வழக்கில் விசாரணைக்கு ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கடந்த இரண்டு நாட்களாக சில தெலுங்கு திரைப்பட பிரமுகர்களிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. பூரி ஜெகநாத்தின் வணிக கூட்டாளியும் நடிகையுமான சார்மி நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!