மழை பாதிப்பு.. சேர்த்து வைச்ச பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த மாணவன்

தமிழகத்தில் காற்றெழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளன. மேலும் அதனை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை வட்டம் கலவை அருகே உள்ள மேலப்பழந்தை கிராமத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவர் அஸ்வின், வெள்ள நிவாரணத்துக்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ.1,338 பணத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வழங்கினார்.

Translate »
error: Content is protected !!