பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாரவுக்கு பரிசுத்தொகை – ராஜஸ்தான் முதலமைச்சர் அறிவிப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

பெண்கள் துப்பாக்கி சுடும் 10 மீ ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. பெண்களின் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியா வீராங்கனை என்று பெருமையை அவர் அடைந்துள்ளார்.

இதை தொடர்ந்து பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாரவுக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் வெள்ளி பதக்கம் வென்ற தேவேந்திராவுக்கு 2 கோடியும் வெண்கலம் பதக்கம் வென்ற சுந்தர் சிங்குக்கு கோடியும் வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!