ராமேஸ்வரம் மீன்வா்கள் 12- பேரை விடுதலை செய்ய உத்தரவு

ராமேஸ்வரம் மீன்வா்கள் 12- பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதி  மீன்பிடிக்கச்சென்ற 12 மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினா் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவா்களின் வழக்கு இன்று  இரண்டவாது முறையாக விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனவா்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தார்.  மேலும்  மீனவா்கள் பயன்படுத்திய இரண்டு மீன்பிடி படகுகளை அரசுடையாக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.  இதனையெடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவா்கள் 12 பேரும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூராக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

 

Translate »
error: Content is protected !!