அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40%-ஆக உயர்த்தப்படும் – தமிழக அரசு

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியது, கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அதேபோல் முதல் பட்டதாரி மற்றும் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியின் முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படும். அரசு பணிக்கான போட்டித்தேர்வுகள் தாமதம் ஏற்படுவதால், நேரடி நியமனங்களுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என்றார்.

 

Translate »
error: Content is protected !!