ரஷ்யா:முகக்கவசம் அணிய சொன்னதில் கோபத்தில் துப்பாக்கிச் சூடுநடத்திய நபர்… 2 பேர் பலி

ரஷ்யாவில் காவலர் முகக்கவசம் அணிய சொன்னதில் கோபமடைந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரசு பொது சேவை மையத்திற்கு வந்த 45 வயது நபர் ஒருவரை முகக்கவசம் அணியுமாறு காவலர் ஒருவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அருகில் இருதவர்களை துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 10 வயது சிறுமி உட்பட 4 பேர் காயமடைந்தனர். குற்றவாளியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!