பாகிஸ்தானின் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானின் லோரலை மாவட்டத்தின் கோஹர் அணை பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 பேர் தப்பினர். மேலும், இந்த சம்பவத்தில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

Translate »
error: Content is protected !!