ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கையெறி குண்டுகள் கண்டெடுப்பு

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள பரிம்புரா-பந்தசாவு தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அப்போது அந்த மண் மூட்டையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 கையெறி வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர். பாதுகாப்பு படையினர் விரைந்து அந்த வெடிகுண்டுகளை மக்கள் நடமாட்டம் இல்லாதா இடத்திற்கு கொண்டு சென்று வெடிகுண்டு நிபுணர்களால் 6 குண்டுகளும் செயலிழக்கச் செய்யப்பட்டன.

Translate »
error: Content is protected !!