“புது வெள்ளம் பொன்னியின் செல்வன்” வெப் தொடர் பணிகளை தொடங்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்

இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் விநாயகர் சதுர்த்தியன்று தனது வெப் தொடர் வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

வேலையில்லா பட்டதாரி 2 வெளியான பிறகு, இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் 2019ஆம் ஆண்டு “புது வெள்ளம் பொன்னியின் செல்வன்” என்ற வெப் தொடரை இயக்குவதாக அறிவித்தார். இருப்பினும், அதை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில் இயக்குனர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இரண்டு பகுதிகளாக இயக்குகிறார்.

இந்நிலையில் செளந்தர்யா ரஜினிகாந்த் விநாயகர் சதுர்த்தியன்று எங்கள் வெப் தொடர் வேலைகளைத் தொடங்கியுள்ளோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். எம்.எக்ஸ் நிறுவனமும் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இந்த வெப் தொடரைத் தயாரிக்கின்றனர். இந்த வெப் தொடரை சரத் ஜோதி இயக்கயுள்ளார்.

Translate »
error: Content is protected !!