ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா – திருச்சி மாவட்டம்

 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் 3-ம் நாளான இன்று காலை 6.30மணிக்கு நம்பெருமாள் அலங்கார கொண்டே அணிந்து, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைரஅபயஹஸ்தம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி உள்ளிட்ட திருவாபரணங்களை சூடியபடி தங்கப் பல்லக்கில் அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளினார்.

 

Translate »
error: Content is protected !!