தேர்வை ஆன்லைனில் நடத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்.. செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு

செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்தக் கோரி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக, கொரோனா ஊரடங்கு காலத்தில், ஆன்லைனில் வகுப்புகளை நடத்திவிட்டு, தேர்வுகளை ஆஃப்லைனில் நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு ஆன்லைன் தேர்வு நடத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தை தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!