சத்துணவு கூடத்தில் திடீர் ஆய்வு.. உணவில் சுவை இல்லை – எச்சரித்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த எட்டிவாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் சத்துணவை சாப்பிட்டு பார்த்தார். உணவு சரியாக சமைக்கப்படவில்லை, சுவையாக இல்லை என்று சமையல்காரர்களை எச்சரித்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நியாய விலைக் கடைக்கு சென்று அங்கு சோதனை நடத்தினார். இந்த மாதம் நுகர்வோருக்கு வழங்கப்பட்ட பொருட்களின் விவரம் மற்றும் நியாய விலையில் இருப்பு பொருட்கள் குறித்து ஆய்வு செய்தார்.

Translate »
error: Content is protected !!