டெல்லியில் தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்

டெல்லியில் நெல் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி சென்ற விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களை டெல்லி போலீசார் ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர்.இந்நிலையில், ரயில் நிலைய வளாகத்திலேயே அமர்ந்த விவசாயிகள், மத்திய அரசை கண்டித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அடிப்படை ஆதார விலையை உயர்த்தவும், உர விலையை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Translate »
error: Content is protected !!