டிரைவர் தூங்கியதால், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்து

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையத்தில் டிரைவர் தூங்கியதால், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் அரசுப் பேருந்து மோதியது.

இருப்பினும் பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இன்று காலை அந்த பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான பேருந்தை கிரேன் மூலம் மீட்டு ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!