தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைவு

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், நேற்றைய நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று 72 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 10  பேருக்கும், செங்கல்பட்டில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை. நேற்று ஒரே நாளில் 161 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!