ஆன்லைனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த செல்போன்களை திருடிய நபர் கைது

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் பொதுமக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை மேலாளராக ஞானசேகர் (வயது 33). பொதுமக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யக்கூடிய பொருட்களை டெலிவரி செய்வது இவர்களின் வேலை.

இவ்வாறு பொதுமக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்த 11 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த ஞானசேகர், இது குறித்து கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், செல்போன்களை அதே நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வரும் தினேஷ் (19) என்பவர் திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Translate »
error: Content is protected !!