இந்தியாவில் இதுவரை செலுத்திய மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 94 கோடி

இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு குறைந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,39,35,309 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் 2,36,643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடத்த 24 நாட்களில் இது மிக குறைவாகும். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79 லட்சத்து 12 ஆயிரத்து 202 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 94 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!