பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட 11 நாடுகளின் மீதான தடையை நீக்கியது இங்கிலாந்து

ஒமிக்ரான் தொற்று காரணமாக பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட 11 நாடுகளின் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியுள்ளது.

அங்கோலா, போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலர் சாஜித் ஜாவேத், ஒமிக்ரான் சமூகப் பரவலாக இல்லாததால் 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான தடை நீக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். ஆனாலும், அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Translate »
error: Content is protected !!