திடீரென 15 அடி ஆழத்துக்கு உள்வாங்கிய கிணறு

திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக இருந்த பழமையான கிணறு ஒன்று திடீரென 15 அடி ஆழத்துக்கு உள்வாங்கியது.

பூண்டி அணையில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில், 25 அடி அகலம், 40 அடி ஆழம் கொண்ட, 25 ஆண்டுகள் பழமையான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணறு உள்வாங்கியது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கிணற்றை பார்வையிட்டார்.

இதுகுறித்து புவியல் வல்லுனர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

Translate »
error: Content is protected !!